என் மகனிற்கு சூழ்ச்சி செய்துவிட்டனர் – முதல்வருக்கு கடிதம் எழுதிய திலிப்பின் தாய்..!!
நடிகை கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் திலீப்பின் தாயார் சரோஜம், கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இதுபோன்ற குற்றங்களை எனது மகன் செய்திருக்க மாட்டான். எந்தத் தவறும் இழைக்காத அவனைத் திட்டமிட்டு இதில் சிக்கவைத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் நீதி கிடைக்க நீங்கள் விசாரணையில் தலையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கடிதத்தை கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பை, அவரது சகோதரர் அனூப் மற்றும் தாயார் சரோஜம் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர்.
திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அவரது தாயார் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்
Average Rating