உலக அழிவை தெரியப்படுத்த அதிசய தூண்… அதிர்ச்சியூட்டும் தகவல்…!! (வீடியோ)
நம் சிறுவயதில் இருந்தே பல சுவாரசியமான கதைகள் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். அவற்றில் பல புனைக்கப்பட்டிருந்தாலும் சிந்திக்க கூடியதாகவும் பயம் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறு, இந்து மதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் அமானுஷ்யங்கள் நிறைந்ததாகவும், பல நம்பிக்கைகள் அறிவியல் ரீதியாக விடை அறியமுடியாத புதிராகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் பல யுகங்களை கடந்து நிற்கும் ஒரு தூணை பற்றியும் அந்த தூண் இடியும் பட்சத்தில் இவ்வுலகம் அழியும் என்றவாறும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத் நகர் மாவட்டத்தில் “ஹரிஷ்சந்திரகட்” எனும் கோவில் அமைந்துள்ளது. 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அருகில் பல குகைகள் உள்ளன. அவ்வாறான குகைகளில் ஒன்று தான் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகை.
இந்த குகைக்குள்ளே எப்போதும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் நீரினால் சூழப்பட்ட ஐந்தடி நீளமுடைய சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. நீரை கடந்து அந்த லிங்கத்தை அடைவதென்பது அவ்வளவு எளிதான காரிமயம் அல்ல.மேலும், சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் உள்ளன. அவை “சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு யுகம் முடிவதற்கு முன்பும் அந்த யுகத்தை குறிக்கும் தூண் இடிந்து விழுந்துவிடும். அந்த வகையில் இங்கு தற்போது 3 தூண்கள் இடிந்த நிலையில், கலியுகத்தை குறிக்கும் நான்காவது தூண் மட்டும் நிலைத்து நிற்கிறது.கலியுகம் முடியும் தருவாயில் இந்த தூணும் இடிந்து விழுந்துவிடும் என்றும் அதற்கு பின் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த தூண் குறித்த பல கருத்துக்கள் மக்களிடம் இருந்தாலும், இந்த அறிவியல் உலகிலும் இதெல்லாம் நம்புகிறீர்களா என கேள்விகளை எழுப்பினாலும், அவர்களிடமும் ஒரு வித பதற்றமும் பரபரப்பும் காணப்பட தான் செய்கிறது.
Average Rating