நாய் ஒன்றை விழுங்கிய பாம்பு! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்..!!
Read Time:1 Minute, 4 Second
மீகஹதென்ன பகுதியில் நாய் ஒன்றை பாம்பு ஒன்று முழுமையாக விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியின் கடை ஒன்றுக்கு பின்னால் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் பார்த்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை பார்வையிடுவதற்காக பலர் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
பாம்புகள். மிருகங்களை உணவுக்காக விழுங்குவது வழமையான நடவடிக்கை என்ற போதிலும், இலங்கையின் மீகஹதென்ன பகுதியில் மக்கள் பார்வையிட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
Average Rating