ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன்..!!

Read Time:4 Minute, 30 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ஜிம்பாப்வே நாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பலமுறை கற்பழித்த பிச்சைக்காரனை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Hwange என்ற நகருக்கு அருகில் உள்ள விக்டோரியா ஃபால்ஸ் பள்ளியில் பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

பள்ளிக்கு சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் Bonface Nyambiya(32) என்ற பிச்சைக்காரன் ஒருவன் தங்கி வந்துள்ளான்.

பலரிடம் பிச்சை எடுத்து அப்பணத்தை பயன்படுத்தி விலைமாது பெண்களிடம் உல்லாசமாக இருப்பது பிச்சைக்காரனின் பழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விலைமாது பெண் ஒருவரை உல்லாசத்திற்கு வரவழைத்துள்ளான்.

ஆனால், பிச்சைக்காரனை பார்த்ததும் ‘எனக்கு விருப்பமில்லை’ எனக் கூறிவிட்டு விலைமாது பெண் புறப்பட முயன்றுள்ளார்.

விலைமாதுவின் மறுப்பால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்காரன் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரை தாக்கி கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளான்.

பின்னர், விலைமாது பெண்ணிடம் இருந்து விலைமதிப்பு வாய்ந்த சாம்சுங் செல்போன் மற்றும் 7 டொலர் பணத்தை திருடிவிட்டு விரட்டியுள்ளான்.

இச்சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்திற்கு பின்னர் பேருந்து நிலையத்தில் இரவு சுமார் 10 மணியளவில் பிச்சைக்காரன் நின்றுருந்தபோது பள்ளி ஆசிரியை வந்துள்ளார்.

ஆசிரியை கண்டு அவர் மீது காமம் கொண்ட பிச்சைக்காரன் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளான்.

‘நானும் பேருந்துக்காக தான் காத்திருக்கிறேன். இரவானதால் தனியாக இருப்பதற்கு அச்சமாக இருக்கிறது’ என பிச்சைக்காரன் ஆசிரியையிடம் உரையாடிக்கொண்டு இருந்துள்ளான்.

அப்போது, எதிர்பாராதவிதமாக இரும்புக் கம்பியை எடுத்து ஆசிரியை தாக்கிவிட்டு அவரை அருகில் உள்ள புதருக்கு இழுத்துச் சென்றுள்ளான்.

பின்னர், ஆசிரியையை நிர்வாணமாக்கிய பிச்சைக்காரன் அவரை ஒரு மரத்தில் கட்டி வைத்துள்ளான்.

ஆசிரியையும் வாயை துணியால் கட்டிய பிச்சைக்காரன் அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளான்.

ஒவ்வொரு முறை கற்பழித்தபோது புகைப்பிடிப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்து 5 முறை கற்பழித்துள்ளான்.

10 மணியளவில் மரத்தில் கட்டிய ஆசிரியையை பிச்சைக்காரன் அதிகாலை 3 மணிக்கு விடுதலை செய்துள்ளான்.

இந்நிலையில், ஏற்கனவே பிச்சைக்காரனால் பாதிக்கப்பட்ட விலைமாது பெண் பொலிசாருக்கு புகார் தெரிவித்ததை தொடர்ந்து மறுநாள் பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆசிரியையும் பிச்சைக்காரன் மீது புகார் கொடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு பிச்சைக்காரன் அழைத்து சென்றபோது அவனை எதிர்வரும் ஆகஸ்ட் 30-ம் திகதி முதல் சிறைக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸிற்கு ஆட்டோவில் சூறாவளியாய் வந்த சர்ச்சையான நடிகை… அசிங்கப்பட்ட ஆரவ்..!! (வீடியோ)
Next post இரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும்..!!