மனைவியுடன் உடலுறவுக்கு தடை: கணவனுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!
பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
குறிப்பிட்ட அந்த தம்பதி இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். ஆனால். 38 வயதான கணவருக்கு Down’s Syndrome என்ற நோய் இருந்ததால் அவர் மனைவியுடன் உடலுறவில் ஈடுப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதனால் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் கூட கடந்த 15 மாதங்களாக தனித்தனி அறைகளில் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.
கணவனை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் இல்லற உறவில் ஈடுப்பட வேண்டும் என்றால் பாலியல் தொடர்பான கல்வியை அவர் கற்க வேண்டும் எனவும், உள்ளூரில் உள்ள கவுன்சில் இவருக்கு உதவ வேண்டும் எனவும் மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.
கணவருக்கு நேர்ந்துள்ள நிலையைக் கண்டு வருத்துமுற்ற அவரது நண்பர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இதனை தொடர்ந்து கணவருக்கு பாலியல் தொடர்பான கல்வியை கவுன்சில் அதிகாரிகள் இலவசமாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், நீதிபதியின் உத்தரவை புறக்கணித்த அதிகாரிகள் கணவருக்கு தேவையான கல்வியை வழங்கவில்லை.
இதனால் கணவனும் மனைவியும் இல்லற வாழ்க்கையை தொடங்குவதில் சிக்கல் நீண்டு வந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்ததால் அதனை நீதிபதி மீண்டும் விசாரணை செய்துள்ளார்.
அப்போது, கணவருக்கு தேவையான கல்வியை கவுன்சில் அதிகாரிகள் தராமல் இருந்ததை நீதிபதி கண்டித்துள்ளார்.
மேலும், கல்வியை உடனடியாக தொடங்குவது மட்டுமில்லாமல் கணவருக்கு 10,000 பவுண்ட் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட கவுன்சில் அதிகாரிகள் இந்தாண்டு தொடக்கத்தில் பாலியல் உறவு தொடர்பான கல்வியை தொடங்கியுள்ளனர்.
மேலும், கடந்த யூன் மாதம் முதல் கணவர் இல்லற உறவுக்கு தயாராக உள்ளதாக மருத்துவர் கூறியதை தொடர்ந்து தற்போது கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
Average Rating