நரை முடி நீங்க .. முடி கருமையாக வளர சில வழிகள்..!!
ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது.
இதனை தடுப்பதுக்கு செயற்கை முறையிலான கலர் சாயங்கள் போன்றவற்றை பயன்படுத்தி எமது முடி அழகினை நாமே கெடுத்துக் கொள்கின்றோம். இதற்கு வீட்டிலேயே இயற்கையாகவே சிறந்த முறையை கையாளுவோம்.
கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி நாளடைவில் மறையும்.
நெய்யை நன்கு தலையில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.
தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.
நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, தலையில் நன்கு படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை காண முடியும்.
வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இவ்வாறு செய்வதனால் நரை முடி நீங்கி முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும்.
Average Rating