வடகொரியாவில் ரகசிய கல்லறை கண்டுபிடிப்பு: யார் புதைக்கப்பட்டுள்ளார்கள்?..!!
வடகொரியாவில் Goryeo வம்ச காலத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வடகொரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக Goryeo வம்சம், வடகொரியாவை ஆண்ட (918-1392) காலக்கட்டத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இதை வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான KCNA உறுதி செய்துள்ளது.
கொரிய தேசிய மரபுவழி பாதுகாப்பு நிறுவனம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தகவல் நிறுவனம் ஆகிய இரண்டும் சேர்ந்து இது சம்மந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த கல்லறையில் 1054ஆம் ஆண்டில் பிறந்து 1105ல் உயிரிழந்த Goryeo வம்சத்தின் 15வது அரசர் Suk Jong-ன் உடல் புதைக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் Suk Jong-ன் கல்லறை தற்போது கண்டுப்படிக்கப்பட்டுள்ளது.
29 மீட்டர் அகலத்தில் உள்ள குறித்த கல்லறை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் தொல்லியல் சங்கமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
Average Rating