கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்! வீடியோ காட்சியால் பரபரப்பு..!! (வீடியோ)
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு கார், இருசக்கர வாகனம் மீது மோதி, பெண்ணை தூக்கி விசிய சிசிடிவி காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.தனிமனிதர்களின் அதிகளவு வாகன பயன்பாடு மற்றும் சாலை விதிகளை சரியாக பின்பற்றாமை ஆகியவை சாலை விபத்துக்களை அதிகரிக்க காரணமாக உள்ளது.
நாட்டில் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இதற்கும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுதல்,சாலை விதிகளை சரியாக பின்பற்றாமை போன்ற காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த வகையில் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சாலையை ஒரு பெண் இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது அவர் மீது ஒரு கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Average Rating