ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை..!!
வாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது.
இப்பிரச்சனையை சரியாக கவனிக்காவிட்டால், இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி, பற்கள் தானாகவே கழன்று விழத் தொடங்கும்.
ஈறுகளில் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி?
இனிப்பு உணவுகளை அதிகமாக உண்ணும் போது, வாயினுள் கிருமிகள் தாக்கி அவ்வப்போது ரத்தம் வடியும் பிரச்சனை ஏற்படும். இதை தடுக்க இனிப்புகள் சாப்பிட்டதும் பற்களை சுத்தமாக துலக்க வேண்டும்.
கர்ப்பக்காலத்தில் உள்ள பெண்களுக்கு ஈறுகளில் ரத்தம் வடிதல் பிரச்சனை இருந்தால், அது விட்டமின் E குறைபாடு மற்றும் வெண் புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம். எனவே உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.
விட்டமின் குறைபாடு காரணமாக பற்களில் ரத்த கசிவு ஏற்பட்டால், பல் மருத்துவரிடன் சென்று ஆலோசனை பெற்று விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் குளிர்பானங்கள், பொரித்த உணவுகள், காரமான உணவுகள், மது அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பற்களை சுத்தம் செய்யும் போது மென்மையான டூத் பிரஷை பயன்படுத்த வேண்டும். அதோடு கடாவாய், ஈறுகள், நாக்கு போன்றவற்றையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
Average Rating