கேரளாவில் பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த முதியவர் கைது..!!

Read Time:2 Minute, 27 Second

201708211237536153_Kerala-4-year-old-child-molested-elderly-man-arrest_SECVPFகேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இவர்களில் அதிகளவு சிறுமிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், உறவினர்களால் இவர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுகிறது. திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியிலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் நடந்து உள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சுலைமான் (வயது 58). இவர் உறவினர் என்பதால் அந்த சிறுமி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று விளையாடுவது வழக்கம்.

சம்பவத்தன்று அந்த சிறுமியின் பெற்றோர் அவரை மட்டும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்று இருந்தனர். அப்போது சுலைமானிடம் அந்த சிறுமியை பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் கூறி உள்ளனர். ஆனால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவரே அந்த சிறுமியை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

பெற்றோர் வீடு திரும்பிய போது மகள் வீட்டில் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அந்த சிறுமியை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு நடந்துள்ள கொடுமையை எடுத்துக் கூறினார்கள். மேலும் மயக்கம் தெளிந்த சிறுமியும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது சுலைமான்தான் என்பதை தெரிவித்தார்.

இதைதொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சுலைமானை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: டாப்சி..!!
Next post 4 காட்சிகளில் நடிக்க ரூ.40 லட்சம் வாங்கிய நடிகை..!!