திருமணமான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: டாப்சி..!!
நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-
“திருமணமான நடிகைகளை பட உலகம் ஒதுக்கி விடும் என்றும் புதிய படங்களில் நடிக்க டைரக்டர்கள் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் பல நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். ஸ்ரீதேவி, வித்யாபாலன், ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் குவிகிறது.
நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஒருவேளை திருமணம் செய்து கொண்டால் படவாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டேன் என்று யாரும் பேசக்கூடாது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்.
தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனாலும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திக்கு போனேன். அங்கு நான் நடித்த படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி வசூல் குவித்துள்ளன. சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். திகில் படங்கள் எனக்கு பிடிக்காது. ஆனாலும் பேய் படங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன.
தெலுங்கிலும் பேய் படமொன்றில் நடித்து வருகிறேன். சாதாரணமாக மனிதர்கள்தான் பேய்களைப்பார்த்து பயப்படுவார்கள். ஆனால் இந்த படத்தின் கதை மனிதர்களைப் பார்த்து பேய்கள் பயப்படுவது போன்று வித்தியாசமாக அமைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நான் வணிக படங்களுக்கு எதிரி இல்லை. அதுமாதிரி கதைகள் அமைந்தாலும் நடிப்பேன்.
முன்பெல்லாம் சம்பளம் எதிர்பார்த்த அளவு இருக்கிறதா? இமேஜ் பாதிக்காமல் இருக்குமா? என்றெல்லாம் யோசித்தே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வேன். இப்போதெல்லாம் கதை திருப்தியாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறேன். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைய படங்கள் வருகின்றன. கதாநாயகர்களைப்போல் கதாநாயகிகளும் தனித்துவமாக தெரிகிறார்கள். இது நல்ல வளர்ச்சியாகும்.
இவ்வாறு டாப்சி கூறினார்.
Average Rating