திருமணம் முடிந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்வேன்: பிரியாமணி..!!
Read Time:1 Minute, 15 Second
பிரியாமணி அவரது காதலர் முஸ்தபாராஜ் என்பவரை நாளை மறுநாள் திருமணம் செய்கிறார். எளிமையான முறையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். 24-ந்தேதி பெங்களூரில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரை உலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
“நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்கிறோம். இதுதான் சரியான முடிவு என்று இருவருமே தீர்மானித்து இருக்கிறோம்.
திருமணத்துக்குப் பிறகும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். திருமண வரவேற்பு முடிந்த 2 நாட்களிலேயே ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. அதன் பிறகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Average Rating