வெட்கமா இல்லை? ஜுலிக்கு பரிந்து பேசும் சின்மயி..!!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அதிக வெறுப்பை பெற்றவர்கள் என்றால் ஜுலி மற்றும் நடிகை காயத்ரி தான்.ஜுலி சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து சக்தி சென்ற வாரமும், காயத்ரி இந்த வாரமும் வெளியேறினர்.
இந்நிலையில் பாடகியான சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதாவது சாதரணமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள், அதையே அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் நாட்டை அழிப்பவர்களை கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன்.விளையாட்டுக்கு செய்தால் ஓகே, ஆனால் ஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா? வெட்கமா இல்ல என கூறியுள்ளார்
Average Rating