விவேகம் படக்குழுவிற்கு நடந்த அமானுஷ்ய திகில் மர்மம்! என்னானது..!!
அஜித் நடித்துள்ள விவேகம் நாளை மறுநாள் வெளியாகிறது. எங்கு பார்த்தாலும் பதாகைகளும், போஸ்டர்களும் தான் தென்படுகிறது. அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பலர் இன்னும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது என இப்படத்தில் நடித்துள்ள லொள்ளு சபா சுவாமி நாதன் கூறியுள்ளார்.
ஷூட்டிங்க்காக பல்கேரியா சென்ற போது அங்குள்ள ஹோட்டல்களில் ரூம் எடுத்து ஒரு அறைக்கு இருவர் என தங்கியுள்ளனர். அதில் மாடிப்பகுதியில் இருந்த ஒரு அறையில் சுவாமி நாதன் தங்கியுள்ளார்.
அந்த அறையில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சொன்னது போலவே மர்ம சக்தி ஒன்று தென்பட்டிருக்கிறது. இருந்தாலும் சுவாமி நாதன் 12 நாட்களாக அதே அறையில் தங்கியுள்ளார்.
இதனால் உடன் சென்றவர்கள் பலரும் ஒவ்வொருநாளும் சுவாமி நாதனிடம் என்ன நடந்தது என விடாமல் கேட்பார்களாம்.
Average Rating