18 வயது இளம் பெண் 4 வயது சிறுவனுக்கு செய்த காரியம்: அதிர்ச்சியில் தாயார்..!!
4 வயது சிறுவனை பராமரிப்பதற்காக பணிக்கு நியமிக்கப்பட்ட 18 வயது யுவதியொருவர் அந்த சிறுவனை பாலி யல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற் றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தக் கைது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
எஸ்மெரல்டா மேரி மெடலின் என்ற மேற்படி யுவதி கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்ட சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுவன் வீடு திரும்பிய தாயிடம் மெடலினின் தகாத நடவடிக்கை குறித்து கூறவும், அதிர்ச்சியடைந்த அந்தத் தாய் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உண்மையில் அவ்வாறான தவறொன்று இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த மெடலினை யும் சிறுவனையும் மரபணு பரிசோதனை க்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போது மெடலின் தான் அந்த சிறுவனிடம் தவறான நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என வாதிட்டுள்ளார். இந்நிலையில் அந்த மரபணு பரிசோதனையின் பெறுபேறுகள் கடந்த வாரம் புதன்கிழமை வெளியாகியிருந்தன.
மேற்படி மரபணுப் பரிசோதனை பெறுபேறுகளின் பிரகாரம் மெடலினின் உடல் உறுப்புகளில் குறிப்பிட்ட சிறுவ னின் மரபணு காணப்பட்டமை கண்டறி யப்பட்டதையடுத்து அவர் கைதுசெய் யப்பட்டுள்ளார்.
Average Rating