மூன்றே நாட்களில் அசத்தும் மாற்றம்: இந்த 2 பொருட்கள் போதும்..!!
Read Time:1 Minute, 24 Second
ஒருவரது முகத்தில் பருக்கள், கருமையான புள்ளிகள் என்று வந்துவிட்டால், அவர்களின் முக அழகே போய்விடும். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து மூன்றே நாட்களில் விடுபட இயற்கையில் உள்ள அசத்தலான டிப்ஸ் இதோ,தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு
மாதுளை விதைகள்
செய்முறை
உருளைக்கிழங்கை கழுவி அதன் தோலை நீக்கி துருவி கொண்டு, அதனுடன் மாதுளையின் விதைகளை சேர்த்து நன்கு அரைத்து பாதியளவு எலுமிச்சையைப் பிழிந்து கலந்துக் கொள்ளலாம்.
பின் அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.
அதன் பின் அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இம்முறையை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.
Average Rating