பெண்களின் பாதங்களில் உணர்ச்சியை கணிக்கலாம்…!!

Read Time:5 Minute, 16 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.

பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.

பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகா பாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர்களாகவும் பெரியோர்களைப் பக்தியுடனும், மரியாதையுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண்ணிய திருத்தலங்களுக்கும,; திருக்கோயில்களுக்கும் சென்று தெய்வ தரிசனம் செய்வதில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வ பக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணிவிடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவது போகவிச்சை குறைவைக் குறிப்பதாகும். வெண்மை நிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும்.

பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாகப் பெற்றவர்கள் கொடூர மனமுடையவர்களாகவும், நல்லோரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள்.

மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமான சுகங்களையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவி யோகத்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தையர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் நற்பயன்களை அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்து வார்கள்.

பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்களாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.

பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவு தாட்சண்யமற்ற மனப் போக்கும் கொண்டவர்களாக இருப் பார்கள்.

பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்திற்கும், சுய தேவைப் பூர்த்திக் காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள்.

உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவாகவும் மேல்நோக்கிச் செல்வனவாகவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனையடைவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்பனா அக்கா கொன்ற 15 தமிழ் பாடல்கள் ஒரு தொகுப்பு..!! (வீடியோ)
Next post குங்குமம் வைப்பதன் நன்மைகள்..!!