இரத்த வெள்ளத்தில் தண்ணீர் கேட்டு துடிதுடித்த இளைஞர்: பரிதாபமாக உயிர் பிரிந்த சோகம்..!!

Read Time:2 Minute, 13 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)டெல்லியில் உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீர் கேட்ட நபருக்கு உதவி செய்ய யாரும் முன்வராமல் அவரை சுற்றி நின்றுகொண்டு வீடியோ எடுத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்பர் அலி(25) என்ற நபரை பணப்பிரச்சனை காரணமாக 5 நபர்கள் ஒன்று சேர்ந்து Vishnu Garden என்ற தெருவில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர்.இதில், பலத்த காயமடைந்த அக்பர் உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டுள்ளார், ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் உதவி செய்வதற்கு முன்வராமல் வீடியோ எடுத்துவிட்டு கடந்து சென்றுள்ளனர்.

பெண் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அக்பரின் சகோதரரான இமாமுக்கு தகவல் கொடுத்துள்ளார், மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அக்பர் உயிரிழந்தார்.இதுகுறித்து இமாம் கூறியதாவது, எனது தம்பி கடைசி மூச்சுக்காக போராடிய போது கூட மனிதாபிமானமற்ற மக்கள் அவனை சுற்றி நின்று வீடியோ எடுத்துள்ளனர், இதில் தொடர்புடைய 5 நபர்கள் மீது புகார் அளித்துள்ளோம்.

அதில், 2 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது, ஆனால் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.மேலும், இது பணப்பிரச்சனை இல்லை என்றும், எனது சகோதரர் அந்த 5 பேரில் ஒருவரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்துள்ளான் என்று கூறி அவனை இவ்வாறு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்..!!
Next post கல்பனா அக்கா கொன்ற 15 தமிழ் பாடல்கள் ஒரு தொகுப்பு..!! (வீடியோ)