பிச்சைக்கார பாட்டியை எட்டி உதைத்து பணம் பறித்த பொலிஸ்: அதிர்ச்சி வீடியோ..!!
Read Time:1 Minute, 20 Second
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சாலையில் பிச்சையெடுத்த மூதாட்டியை எட்டி உதைத்து அவரிடம் இருந்து பொலிசார் பணம் பறித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் சாலையின் ஓரத்தில் மூதாட்டி ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற முனாவர் ஹுசைன் என்ற பொலிஸ், மூதாட்டியின் அருகில் சென்று பணம் கேட்டுள்ளார்.என்னிடம் பணம் இல்லை, நான் தரமுடியாது என மூதாட்டி கூறியதற்கு, தனது காலால் எட்டி உதைத்து அவரிடம் இருந்து பணத்தினை கைப்பற்றியுள்ளார்.
மூதாட்டி கையெடுத்து கும்பிட்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் கொடுக்கவில்லை.தலைமை காவலரின் இந்த கேவலமான செயலை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.இதனால் தற்போது அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்
Average Rating