எச்.ஐ.வி.யை வென்ற ஆணழகன் ; பிரதிப்குமார் சிங்..!!
Read Time:1 Minute, 14 Second
உலக ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்டியில் மகுடம் சூடியவருமான மணிப்பூரைச் சேர்ந்த பிரதிப்குமார் சிங் பற்றிய சுயசரிதை புத்தகம் வெளியாகியுள்ளது.
அந்த புத்தகத்தில் பிரதிப்குமார்,
‘நான் எச்.ஐ.வி. நோயால் (எய்ட்ஸ்) பாதிக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக தெரிவித்ததற்கு காரணம், எதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான்,
2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை எனது வாழ்க்கையில் கடினமான காலகட்டமாகும். ஆனாலும் மனம் தளரவில்லை. வைத்தியர்களின் அறிவுரையையும் மீறி கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்று சாதித்தேன்’ என்று கூறியுள்ளார்.
Average Rating