இறந்து கிடந்த பாட்டி… நித்திரையிலிருந்து எழுப்ப போராடிய 4 வயது குழந்தை..!!
4 வயது குழந்தை ஓன்று பேருந்து நிலையத்தில் தனது பாட்டி இறந்தது கூட தெரியாமல் அவர் தூக்கத்தில் இருக்கிறார் என நினைத்து எழுப்பியுள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் 55 வயதான பாட்டி ஒருவர் கடந்த சில மாதங்களாக தினமும் அவரது நான்கு வயது பேத்தியுடன் உறங்கியுள்ளார். வழக்கம் போல் அனைத்து நாட்களையும் போலவே அந்த பாட்டியை 4 வயது குழந்தை காலையில் எழுப்பியுள்ளது.
ஆனால் அந்த குழந்தைக்கு தெரியவில்லை தனது பாட்டி கண்களை திறக்க மாட்டாள் என்று. பாட்டியை எழுப்பிக் கொண்டே இருந்தது அந்த குழந்தை.
பீகாரில் இருந்து வந்த அவர் தனது மகள் மற்றும் மருமகன் முன்னதாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த குழந்தையின் அழுகையை கேட்டு, உள்ளூர் மக்கள் ஒன்று கூடி இறுதியாக பொலிசாரை அழைத்தனர்.
இறந்த அந்த பாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், சரத்மா சேவா கமிட்டியில் உடலை ஒப்படைத்தனர் அதிகாரிகள். அந்த நான்கு வயது குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தை ஊட்டச்சத்து குறைவு காரணமாக மிகவும் பலவீனமாக உள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
Average Rating