வேறொரு நபருடன் தொடர்பு: மனைவியை கொன்ற கணவன்..!!

Read Time:2 Minute, 39 Second

abuse (28)சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியை கொலை செய்த கணவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சுவிஸின் லூசேர்ன் மாகாண நீதிமன்றம் தான் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது

சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் கிரீஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவர் கடந்த 2008-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.கணவரை விட மனைவி 17 ஆண்டுகள் இளையவர் ஆவர். இருவருக்கும் 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், 2011-ம் ஆண்டு இரண்டு குழந்தைகளுடன் சுவிஸின் லூசேர்ன் மாகாணத்தில் உள்ள Kriens நகரில் மனைவி குடியேறியுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கணவரும் சுவிஸ் நாட்டிற்கு சென்று மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், மனைவி மற்றொரு நபர் மீது காதல் கொண்டதால் கணவரை விட்டு இரண்டு குழந்தைகளுடன் பிரிந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது பிள்ளைகளை தன்னுடன் அழைத்து வர திட்டமிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதி மனைவி வசித்து வந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, பிள்ளைகளை அழைத்து செல்ல முயன்றபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது

ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கணவர் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.இவ்வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘இது என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய குற்றம்’ என கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.எனினும், மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கணவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்..!!
Next post பொண்ணுங்கள கஷ்டமே படாம மடக்கணுமா?… இத ட்ரை பண்ணுங்க பாஸ்..!!