செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் காணப்படுவதாக நாசா தகவல்..!!
செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருப்பதை செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் நாசா உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஓர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படம் உயர் ரெசலூஷயன்ஸ் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கமரா (High Resolution Imaging Science Experiment – HiRISE ) மூலம் மே மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாயில் காணப்படும் பனி மலைகள், பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல், பனி மற்றும் கார்பன் டையொக்சைட் கலந்து உலர்ந்த பனிப் போல் காட்சியளிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating