நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..!!
Read Time:1 Minute, 28 Second
ஜார்கண்ட் மாநிலத்தில் காதலனும், குடும்பமும் கைவிட்ட நிலையில் 17 வயது தெருவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியா மற்றும் ராம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்
நாளடைவில் பிரியா கர்ப்பம் தரித்துள்ளார், பிரியா கருவுற்றதை அறிந்த ராம் அவரை விட்டு விலகியுள்ளார்பிரியா கர்ப்பமாக இருப்பது அவருடைய குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது, சொந்தபந்தங்கள் தவறாக பேசிவிடுவார்கள் என பயந்து மகளை ஒதுக்கிவைத்துள்ளனர்.
இதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடின்றி பிரியா தெருவிலும், சாலையிலும் வசித்துள்ளார், இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பின்னர் அந்த வழியாக சென்ற மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating