ஆரவ், ஜூலியை கேள்விகளால் வறுத்தெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தினர்..!!
பிக் பாஸ் குடும்பத்தில் ஆரவ், ஜூலியிடம் கடந்த கால நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பியதால் சற்று கோபத்துடன் காணப்பட்டனர்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதில் புதிய வரவுகளான ஜூலி மற்றும் ஆர்த்தியுடன் பிக் பாஸ் குடும்பத்தினர் கலகலப்பாக பொழுதைக் கழித்து வருகின்றனர்.இதற்கிடையில் ஓவியா குறித்து ஆரவிடம் ஆர்த்தி கேள்வி எழுப்பினார். தனது எதிர்காலத்தையும் பொருட்படுத்தாது காதலைக் கூறிய ஓவியா மீண்டும் வந்தால் ஏற்றுக் கொள்வீறா? என்று கேட்டார். காதலையும், வேலையையும் மட்டும் கருத்தில் கொண்டால் போதாது.
பெற்றோரது எண்ணங்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறி சமாளிக்கிறார். இதையடுத்து தொடர் கேள்விகளால் ஆரவ், ஏன் பழையதையே இப்படி கிளறுகிறீர் என்று கூறி, அவ்விடம் விட்டு புறப்பட்டு சென்றார்.இதேபோல் நீங்கள் ஏன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஜூலியிடம், சுஜா கேள்வி எழுப்புகிறார். அதற்கு தான் சூழ்நிலை கருதி நடந்து கொண்டதாகவும், தனது இயல்பை மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறி தனிமையில் இருக்க விரும்புவதாய் கூறி எஸ்கேப்பானார்
Average Rating