வடலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை..!!

Read Time:2 Minute, 57 Second

201708311749441795_wrong-relationship-dispute-people-killed-near-vadalur_SECVPFகடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் இளவரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 36). இவரது மனைவி சூர்யா (24). இவர்களுக்கு வாசுதேவன் (3) என்ற மகன் உள்ளான்.

ஆனந்தராஜ் கடந்த 24-ந் தேதி வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் ஆனந்தராஜை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.

இதைத்தொடர்ந்து ஆனந்தராஜின் சகோதரர் சிவசங்கர் (40) வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆனந்தராஜை தேடிவந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆபத்தானபுரம் அருகே உள்ள தைல மரக்காட்டில் ஆனந்தராஜ் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஆனந்தராஜின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது. துர்நாற்றமும் வீசியது.

ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது மனைவி சூர்யா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதை கேட்டதும் கதறி அழுதனர்.

ஆனந்த ராஜின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அந்த பெண்ணின் கணவர் அறிந்து ஆனந்தராஜை கண்டித்தார்.

ஆனால், அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆனந்தராஜின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து பிணத்தை தைல மரம் காட்டில் வீசி சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து கொலையாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தைல மரம் காட்டில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியில் கலக்கும் ராய் லட்சுமி… (வீடியோ)
Next post சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்..!!