பேய்கள் மட்டுமே வசிக்கும் அதிர்ச்சி கிராமம்..!!

Read Time:3 Minute, 8 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காக பலரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் கிராமங்களை விட்டுச் சென்ற சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சிகலந்தது. ஏனெனில் அவர்கள் அடிப்படை வசதிகளைத் தேடி இடம்பெயரவில்லை. பேய்களின் இடையூறுகளால் இடம் பெயர்ந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் குல்தரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்களை மட்டுமே பார்க்கக்கூடிய, ஒரு சபிக்கப்பட்ட கிராமமாக கருதுகின்றனர். இந்த கிராமத்தின் வரலாறு 1291-ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.

பளிவால் பிராமணர்கள் என்ற சமூகத்தினர் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கிராமம் இது. இதனுடன் இணைந்து சுமார் 84 கிராமங்கள் இருந்துள்ளன. இந்தநிலையில் சலிம் சிங் என்ற திவான், கிராம தலைவர் மகளின் அழகில் மயங்கி, அவளை அபகரிக்கத் திட்டமிட்டான்.

இதன்படி அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தரவில்லை என்றால், மொத்த கிராமத்தையும் அழித்துவிடுவதாக எச்சரித்துள்ளான். அவருக்கு பயந்த 85 கிராம மக்களும் 1825-ம் ஆண்டு வாக்கில் கிராமத்தை மொத்தமாக காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்று இந்த கிராமத்தின் வரலாறு கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தக் கிராமம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்ததாக இருக்கக் கூடாது என்று கிராம மக்கள் சாபமிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 300 ஆண்டுகளாக இப் பகுதியில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அதையும் மீறி தங்க முயற்சி செய்தால் இரவு நேரங்களில் அமானுஷ்ய உருவங்கள் தெரிவதாகவும், விநோத குரல்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனை பலரும் அனுபவித்துள்ளதாகவும் சாட்சியம் கூறுகின்றனர். எனினும் இந்தப் பகுதியை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடை குறைப்பு பற்றி விளக்கம் அளித்த இமான்..!!
Next post பிக்பாஸ் வீட்டில் திருமணம் செய்து கொண்ட ஹரிஷ் – பிந்து மாதவி…!