அரியானா: வகுப்பறையில் இருந்த சக மாணவனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்..!!

Read Time:1 Minute, 31 Second

201709021457551680_Student-allegedly-shoots-another-inside-classroom-of-ITI_SECVPFஅரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் இன்று மாணவர்களுக்கிடையே நடந்த தகராறில் வகுப்பறையில் இருந்த மாணவரை சகமாணவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் சிசிடிவி பதிவை பார்த்த போது, காயமடைந்த மாணவர் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு மாணவர்களில் ஒருவர் தன் பையில் உள்ள துப்பாக்கியை எடுத்து மாணவனை நோக்கி சுட்டார். இதில் படுகாயமடைந்த மாணவர் கீழே விழுந்தார். பின்னர் இருவரும் ஓடி விட்டனர். இந்த வீடியோ இணையதளங்களில் விரைவாக பரவி வருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள இரு மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மற்ற மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுமிதாவை மிரட்டிய கன்னட பெண்மணி! இதனால் தான் கையை கடித்தாரா?..!! (வீடியோ)
Next post திருமணத்துக்கு முன்பு உறவு வைத்துக்கொள்ள வேண்டும்: நடிகர் கருத்தால் பரபரப்பு..!!