வல்வெட்டித்துறையில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போன மீனவர் வீடு திரும்பினார்..!!
Read Time:1 Minute, 19 Second
யாழ். வல்வெட்டித்துறையில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த மீனவர், தென்னிலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இன்று வீடு திரும்பியுள்ளார்.
யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று கடந்த மாதம் 31ஆம் திகதி, 47 வயதான வடிவேலு ஶ்ரீகாந்த் என்ற மீனவர் காணாமற்போயிருந்தார்.
மீனவர் வீடு திரும்பாமை தொடர்பில், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காணாமற்போயிருந்த கொண்டைக்கட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் தென்னிலங்கை மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு இன்று வீடு திரும்பினார்.
பாதுகாப்பாக வீடு திரும்பிய மீனவர் மருத்துவ சிசிச்சைகளுக்காக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating