அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ்: ஷரபோவா சாம்பியன்: இரட்டையர் பிரிவில் லியாண்டர் ஜோடி வெற்றி
கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது வருகிறது. இதில் பெண்கள் இறுதி போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் ரஷிய வீராங்கனை ஷரபோவா பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின்ஹெனின் ஆகியோர் மோதினார்கள். ஷரபோவா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இதன் மூலம் 6-4 என்ற புள்ளிகளில் முதல் செட்டை எளிதாக கைப்பற்றினார்.
அடுத்த சுற்றில் ஜஸ்டின்ஹெனின் சுதாரித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தார். ஆனால் பலன் இல்லை. இந்த செட்டையும் ஷரபோவா 6-4 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் ஷரபோவா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
ஷரபோவா முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தாலும் அமெரிக்கா ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த ஆட்டம் 90 நிமிடம் நடந்தது.
இதேபோல ஆண்கள் இரட்டையர் இறுதி போட்டி நடந்தது. இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் செக்குடியரசு வீரர் மார்ட்டின் டாமுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். அவர்களை ஜோனஸ் (சுவீடன்) மாக்ஸ் மிர்னி (பெலாரஸ்) ஜோடி எதிர் கொண்டது. இதில் லியாண்டர் ஜோடி 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட்டுகளில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
ஆண்கள் இறுதி போட்டிக்கு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர்பெடரர், அமெரிக்க வீரர் ஆன்டி ரோட்டிக் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
முன்னதாக அவரை இறுதி போட்டியில் ஆன்டிரோட்டிக் ரஷிய வீரர் மைக்கேல் யோஸ்னியை 6-7, 6-0, 7-6, 6-3 என்ற செட்டுகளில் தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டி இன்று மாலை நடக்கிறது.