பன்றிக்கு அஞ்சி ஓடுகையில் மின்வேலியில் சிக்கியவர் பலி..!!
மாவனெல்ல இஹல மாசேல பிரதேசத்தில், பயிரிடப்பட்ட இடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சட்டவிரோதமான மின்வேலியில் சிக்கி, 25 வயதான இளைஞன் பலியாகியுள்ளான்.
இதேவேளை, இதில் சிக்குண்டு, கடுமையான எரிக்காயங்களுக்கு உள்ளான மற்றோர் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்று, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், திங்கட்கிழமை இரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இங்குல பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் இந்திக என்பவரே, சம்பவத்தில் பலியாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலியானவரும், பாதிக்கப்பட்டவரும் உறவினர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவ்விருவரும், தன்னுடைய நண்பனின் வீட்டுக்குச்சென்றுகொண்டிருந்த போது, காட்டுப் பன்றிகள் வந்துள்ளன. அவற்றைக் கண்டுபயந்த இவ்விருவரும், தப்பியோடிய வேளையிலேயே, மின்வேலியில் சிக்கிக்கொண்டுள்ளனர் என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று, மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மின்வேலியை அமைத்தவர், அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகி விட்டார் என்றும், அவரை தேடி வலைவிரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating