புளூவேல் விளையாட்டின் கடைசி டாஸ்க்… தற்கொலைக்கு முன் நபர் வெளியிட்ட காட்சி..!! (வீடியோ)
தற்போது மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது புளூ வேல் என்னும் விளையாட்டு. இந்த விளையாட்டினை விளையாட ஆரம்பித்தால் இறுதியில் மரணம் மட்டுமே தீர்வு என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் பலரும் இவ்விளையாட்டினால் தற்கொலையும் செய்துள்ளனர். அப்படியொரு அதிர்ச்சியான காட்சியே இதுவாகும்.
குஜராத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் “என்னை மன்னித்து விடுங்கள், என் மனைவி மக்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளேன், புளூ வேல் விளையாடி கடைசி டாஸ்கிற்கு வந்ததால் இந்த முடிவினை எடுத்துள்ளேன்.
எனது பையில் உள்ள 46 ஆயிரம் ரூபாய் பணத்தை என் குடும்பத்தாரிடம் சேர்த்து விடுங்கள்” என்று சபர்மதி ஆற்றில் தற்கொலை செய்வதற்கு முன் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கையில் விளையாடியதற்கான எந்த தடங்களும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். காணொளியில் அவர் பேசியிருந்தாலும் இந்த விளையாட்டால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எ்ன்பதை பொலிசார் உறுதி செய்யவில்லை.
Average Rating