கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் புளித்த ஏப்பத்திற்கு எளிய வைத்தியம்..!!

Read Time:3 Minute, 2 Second

201709061216224796_Simple-remedies-for-Sour-belching-to-women-during-pregnancy_SECVPFநெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும். இந்த புளிப்பு ஏப்பத்திற்கு அதிகமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சிரமமாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து இந்த புளித்த ஏப்பத்தை எப்படி விரட்டுவது என்பது பற்றி காணலாம்.

சாப்பாட்டு விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுதல், அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும், செரிமானமாக கடினமாக உள்ள உணவுகளையும் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

என்ன தான் இருந்தாலும், கர்ப்பமாக உள்ள சமயத்தில் டயட்டை கடைப்பிடிப்பது பலருக்கு கடிமானதாக தான் இருக்கும். கர்ப்பத்தின் இரண்டாவது பருவகாலத்தில் எதை சாப்பிட்டாலும் புளித்த ஏப்பம் வரும். இதற்கு மருத்துவரும் மருந்துகளை பரிந்துரைப்பார்.

சாப்பிட்ட பிறகு இந்த புளித்த ஏப்பம் வராமல் இருக்க, மாத்திரைகளை சாப்பிட்டாலும் கூட அது அந்த சமயத்தில் மட்டும் சரியாகும். அதன் பின்னர் மீண்டும் ஆரம்பித்துவிடும்.

ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை குடித்தால், புளித்த ஏப்பம் தீர்ந்து போகும் அல்லவா? அதே போல தான் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாலும் புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்துவிடுகிறது. இது உங்களது செரிமான மண்டலத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்ற ஐஸ்கிரீம்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த கலோரிகளை கொண்டது. இது கொழுப்பு நீக்கப்பட்டதும் கூட..

ஆனால் இந்த ஐஸ்கிரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிட்ட பிறகு யோகார்ட் சாப்பிடலாம்.

இந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இது கர்ப்பகாலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் செய்ய கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலுறவில் ஏற்படும் பாதிப்புகள்..!!
Next post உறங்கி கொண்டிருந்த கணவருக்கு மனைவி செய்த கொடூரம்! என்ன கருமண்டா இது ?..!!