3 கிலோ எடை கொண்ட பூனையை விழுங்கி துப்பிய மலைப்பாம்பு..!! (வீடியோ)
தாய்லாந்து நாட்டில் மலைப்பாம்பு ஒன்று 3 கிலோ எடை கொண்ட பூனையை விழுங்கி துப்பியுள்ளது.Pathum பகுதியை சேர்ந்த Saowarak Charoen (59) என்ற பெண்மணி Bobb என்ற பூனையை வளர்த்து வந்துள்ளார்
அதிக மரங்கள், செடி கொடிகள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு பாம்புகள் நடமாட்டம் அதிகம். இந்நிலையில், 17 அடி கொண்ட மலைப்பாம்பு வீட்டின் சமையலறையின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது.அப்போது, அங்கு இருந்த பூனையை மெதுமெதுவாக விழுங்கியுள்ளது, இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த Saowarak பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இரண்டு வனவிலங்கு அதிகாரிகளுடன் வந்த பொலிசார் அந்த பாம்பினை வெளியில் எடுத்து சென்றுள்ளனர், பாம்பினை தரையில் போட்டவுடன் அது தான் சாப்பிட்ட பூனையை வெளியில் துப்பியுள்ளது.அந்த பாம்பினை வனவிலங்கு அதிகாரிகள் காட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர், தான் ஆசையாக வளர்ந்த பூனை இறந்துவிட்டது என Saowarak Charoen தெரிவித்துள்ளார்.
Average Rating