பிக்பாஸ் வீட்டில் இன்றைய நிலை… இந்த கண்ணீருக்கு காரணம் இது தானா?…!!(வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்றைய தினத்தில் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களுக்கு கண்ணீர் மல்க காட்சித் தருகின்றனர். இதற்குக் காரணம் என்ன என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்…
ஒருவேளை இன்றைய டாஸ்க்கில் ஒன்றாக இருக்குமா?… அல்லது ஆர்த்தியின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளாரா?… அல்லது போட்டியாளர்களின் வீட்டில் துக்க நிலை ஏற்பட்டிருக்குமா?.. என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் சினேகன் அப்பா, அப்பா என்று கதறுவது போன்று அதற்கு சக போட்டியாளர்கள் ஆறுதலளிக்கும் வகையிலும் காட்டியுள்ளனர்.
மேலும் உள்ளே வேறொரு நபரும் இருக்கிறார். இவர் சினேகனின் தம்பி என்றும் தனது தந்தையின் வயது முதிர்வு காரணமாக வர இயலாததால் பிக்பாஸ் அவரை போனில் பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சினேகன் தனது குடும்பங்களை பல வருடங்கள் பிரிந்து வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating