இறந்த உறவினர்களை தோண்டி எடுத்து கொண்டாடும் பண்டிகை..!!
இந்தோனேஷியாவில் இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து ஒப்பனை அலங்காரம் செய்து வினோதமான முறையில் பண்டிகை கொண்டாடுகின்றனர்.இந்தோனேஷியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்களே இவ்வாறு கொண்டாடுகின்றனர்.
எங்களுக்கு இறப்பு என்று ஒன்று கிடையாது, நாங்கள் ஒற்றுமையுடம் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காகவே இந்த பண்டிகையை கொண்டாடுவதாகவும் கூறுகின்றனர்.
இந்த பண்டிகை முக்கியமானது என்பதால் இந்த இனத்தவர்கள் இவர்களுக்குள்ளே திருமணமும் செய்து கொள்கின்றனர், வேற்றினத்தவர்காளுடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்வதும் இல்லை.
சிலர் இறந்தவர்களை அவர்கள் வீட்டிலேயே ஒரு அறையில் வைத்தும் அவர்களுக்கு தினமும் துணி அணிவித்தும், சக மனிதர்களை போல் அவர்களுடன் பேசி அவர்கள் உயிருடன் இருப்பதுமாகவே கருதுகின்றனர்.Carlin என்ற பெண் ஒருவர் இறந்த அவரது தந்தையின் உடலை 12 வருடமாக அவரது வீட்டில் வைத்துள்ளார்.
இதுகுறித்து Carlin கூறிகையில், என் அப்பா என் கூடவே இருப்பது தான் எனக்கு சந்தோஷம்,தினமும் உணவு, மது, சிகரெட் என ஒரு நாளைக்கு இருமுறையும் வைப்பேன்.அந்தக் காலத்தில் இறந்த உடலை பாதுகாக்க சிறப்பு இலைகளை சடலத்தில் தேய்த்து வைத்திருப்பார்கள் என்றும், தற்போது formalin-யை உடலில் செலுத்தி வருவதாகவும் கூறுகின்றார்.
Average Rating