மின்சாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிசய மனிதன்..!!
வடிவேலு நகைச்சுவையில் ஒருவர் டியூப் லைட், குண்டு பல்பை உணவாக எடுத்துக் கொள்வார், இதை பார்த்து ரசித்திருப்போம்.ஆனால் உண்மையில் இதுபோல உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பல்பின் மூலம் வரும் மின்சாரத்தை உணவாக எடுத்துக்கொள்கிறார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் முசாவர் நகரை சேர்ந்தவர் நரேஷ் குமார், அவரை அந்த பகுதி மக்கள் மின்சார மனிதன் என்றே அழைக்கின்றனர்.
இவர் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லையாம்.பசி எடுக்கும்போது பல்புகளை எரியவிட்டு அதன் வயர்களை எடுத்து வாயில் வைத்துக் கொள்வாராம்.
இவ்வாறு 30 நிமிடங்கள் செய்யும் போது அவருக்கு பசி அடுங்குவதாக கூறுகிறார்.நரேஷ் குமார் ஓரு நாள் தெரியாமல் மின்சார ஒயரை தொட்டுள்ளார். ஆனால், ஒன்றும் ஆகாத அவர் தனக்குள் இருக்கும் அபூர்வ சக்தியை கண்டறிந்தார்.
மேலும் தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டி போன்ற எல்லா வகையான மின்சார பொருள்களையும் தொடுவேன் என கூறியுள்ளார்.வீட்டில் உணவு இல்லாத போது இவ்வாறு செய்வதன் மூலம் தனது பசி அடங்கிவிடுவதாக சொல்கிறார் நரேஷ்.
Average Rating