ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர்..!!

Read Time:2 Minute, 14 Second

downloadதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சங்கீதா கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒரு விசே‌ஷத்துக்கு மூலனூர் சென்றார். அங்கு மூலனூரை சேர்ந்த மதியழகன் (29). என்பவரும் வந்திருந்தார். இவர் திருமணமாகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அப்போது சங்கீதாவும், மதியழகனும் பழகினர். இருவரும் தங்களது செல்போன் எண்ணை கொடுத்து போனிலும் பேசி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் மதியழகன், சங்கீதாவிடம் தவறாக பேசி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சிஅடைந்த அவர் எச்சரித்தார். தொடர்ந்து இது போல் பேசியதால் சங்கீதா வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் மதியழகனை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சங்கீதா தன் மீது போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த மதியழகன் சம்பவத்தன்று 2 லிட்டர் மண்எண்ணையுடன் தீத்தாம் பாளையம் பகுதியில் ஒரு கடை அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது சங்கீதா கடைக்கு வந்த போது திடீரென மதியழகன், அவர் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் தீ பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சங்கீதாவை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் மதியழகன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சைதான்யாவை மிரட்டி காரியத்தை சாதித்த சமந்தா…!!
Next post ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள்..!!