சிறிய வீட்டுக்குள் 130 பூனைகள் வளர்த்த பெண்மணி – கைது…!!
பரிசின் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில், 25 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்ட வீட்டுக்குள் 130 பூனைகள் வளர்த்த பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து பூனைகளையும் நான்கு நாட்கள் போராடி ‘La fondation 30 Millions’ எனும் அமைப்பினர் மீட்டனர். குறித்த வீட்டுக்குள் அனைத்து இடங்களிலும் பூனைகள் பெருக்கெடுத்து பண்ணை போன்று காட்சியளித்ததாகவும், சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பூனைகள் நிறைந்திருந்ததாகவும், மொத்தமாக 130 பூனைகளுக்கு மேல் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர பூனைகளின் உடல்கள் எங்கும் மிக மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், இரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், உடனடியாக பூனைகளை வளர்த்த 60 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்மணி, தனது வீட்டின் ஜன்னலுக்கால் பூனைகளை தூக்கி வெளியே வீசியதாகவும், அதனைத் தொடர்ந்தே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating