திருவட்டார் அருகே பிளஸ்-2 மாணவியை ஊட்டிக்கு கடத்தி கற்பழிப்பு: வாலிபர் மீது வழக்கு..!!

Read Time:2 Minute, 21 Second

201709091630542771_kidnapped-plus-two-girl-student-molestation-people-on_SECVPFதிருவட்டாரை அடுத்த ஆற்றூர் வியன்னூர் ஆலங்கோட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுஷ்மா (வயது 16), (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இவர் இரணியலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு பஸ்சில் செல்வது வழக்கம். இரணியலில் இருந்து அழகிய மண்டபம் வழியாக வீட்டிற்கு செல்வார்.

அப்போது அழகிய மண்டபம் பகுதியில் வைத்து மாறாங்கோணம் பகுதியைச் சேர்ந்த வினு (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து வினு அவ்வப்போது சுஷ்மாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மாணவி வீடு திரும்பினார். அப்போது வினு தன்னை ஊட்டிக்கு கடத்திச் சென்றதாகவும், அங்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தன்னை பரிதவிக்கவிட்டு வினு தலைமறைவாகி விட்டதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வினு மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர், தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் சுஷ்மாவை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைத்தளத்தை கலக்கிய துப்பறிவாளன்…!!
Next post மலையாள சினிமாவில் ஆணாதிக்கம் : பாவனா குற்றச்சாட்டு…!!