2 குழந்தைகள் முன்னிலையில் தாயை கொடூரமாக கற்பழித்த கும்பல்: ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்..!!
டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை பஸ்சில் கடத்தி சென்ற கும்பல் கொடூரமாக கற்பழித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தபடிதான் இருக்கின்றன. இந்த நிலையில் மேற்குவங்காள மாநிலத்தில் இதேபோன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.
மேற்குவங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் சைந்தியா என்ற இடம் உள்ளது. இந்த ஊரைச்சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், தரக்பாஸ்கர் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 13 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உளளனர். கணவர் வேலை காரணமாக வெளி மாநிலத்திற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் அந்த பெண்ணுக்கும், தரக்பாஸ்கருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
ஆனால் இடையில் மனமாற்றம் ஏற்பட்ட அந்த பெண் கள்ளத்தொடர்பை துண்டிக்கும்படி தரக்பாஸ்கரிடம் வற்புறுத்தினார். இதனால் கோபம் அடைந்த தரக்பாஸ்கர் நேற்று காலை தனது 2 நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார்.
அங்கு 3 பேரும் அந்த பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவருடைய சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அமுக்கி இருந்தனர். பெண்ணின் 2 குழந்தைகள் முன்னிலையிலேயே இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்தது.
பின்னர் மதுபாட்டிலை உடைத்து வயிற்றில் செலுத்தினார்கள். இதில் ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்தார். உடனே அவர்கள் ஓடிவிட்டனர்.
இது சம்மந்தமாக வெளியே தகவல் தெரிந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்கு பிறகுதான் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
உடைந்த பாட்டில் பகுதிகள் வயிற்றுக்குள் இருப்பதால் அவற்றை ஆபரேஷன் செய்து வெளியே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யும் வசதி இல்லை.
எனவே சியூரி நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் முடிவு எடுத்தனர். ஆனால் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் அளவிற்கு அவரது உடல்நிலை இல்லை. கவலைக்கிடமான முறையில் தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
இதுசம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தரக்பாஸ்கரை கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் தேடிவருகிறார்கள்.
மேற்குவங்காளத்தில் கடந்த ஜூலை 4-ந்தேதி இதேபோல சந்தோஷ்காலி என்ற இடத்தில் 61 வயது பெண்ணை ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்து மதுபாட்டிலை வயிற்றில் செலுத்தியது. இதில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் ரவுடிகள் அமர்ந்து மதுகுடித்ததை தட்டிக்கேட்டதால் இந்த கொடூர சம்பவம் நடந்தது.
Average Rating