ஓவியா நடிப்பில் வெளிவரும் போலீஸ் சாம்ராஜ்யம்..!!

Read Time:3 Minute, 6 Second

201709152123369688_Oviya-next-movie-Release-Police-Samrajyam_SECVPFஅன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் சாம்ராஜ்யம்.பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா, பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.

களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னி ஆன ஓவியா போலீஸ் சாம்ராஜ்யம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கிறது.

இந்த கொலை குடும்பத்தில் மட்டுமல்ல அந்த ஊரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. உள்ளூர் காவல் துறையால் துப்புத்துலக்க முடியாமல் தடுமாற தொடர் கொலைகள் நிகழ காரணம் என்ன. குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பிருத்விராஜ் அரசால் நியமிக்கப்படுகிறார்.

தொடர் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடித்து கொலைகாரனை பிருத்விராஜ் கைது செய்து விசாரணை செய்கிற போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகிறது. இது தான் போலீஸ் சாம்ராஜ்யம் திரைக்கதை.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்த ஓவியா, இப்படத்தில் ரசிகர்களை கலங்கடிக்கும் கிளாமர் நாயகியாக நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் பரபரப்புக்கு பின் ஓவியா நாயகியாக நடித்து வெளிவரும் படம் என்பதால் தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் போலீஸ் சாம்ராஜ்யம் ரிலீசாகிறது.

மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கு பிரிமியர் ஷோவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஓவியா கலந்து கொள்ள இருக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் தயாராகியுள்ள போலீஸ் சாம்ராஜ்யம் செப்டம்பர் 22 அன்று தமிழகத்தில் ரீலீஸ் செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லீக்கானது பிரபல நடிகையின் படுக்கையறை காட்சிகள்..! சமூக வலைதளத்தில் வைரல்…!!
Next post கணவரை கொலை செய்து பிணத்துடன் வாழ்ந்த பெண்..!!