காது ஓட்டைகளில் துர்நாற்றமா?..!!
காதுகளில் கம்மல் போடும் ஓட்டைகளில் இருந்து சிலருக்கு துர்நாற்றம் ஏற்படும். அதை தடுக்க ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை கொண்டு அடிக்கடி காது பகுதிகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.காது ஓட்டைகளில் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்?
காதில் கம்மல் அணியும் ஓட்டையில் இருந்து துர்நாற்றத்துடன் அரிப்பு ஏற்பட்டால் அது நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் மெட்டிரியல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம்.
கம்மல் அணியும் ஓட்டையை எப்போதும் அழுக்கான கையால் தொடக் கூடாது. ஏனெனில் கிருமிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவதால், காதில் தொற்றுக்களை ஏற்படுத்திவிடும்.
உறங்கும் போது பயன்படுத்தும் போர்வைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அழுக்குகள் காது மற்றும் சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
காதுகளை சுத்தம் செய்வதற்கு மிக வலிமை வாய்ந்த கெமிக்கல்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் காது பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும்
Average Rating