கணவன் – மனைவி சண்டையில் ஒன்றரை மாத கைக்குழந்தை பலி -அழுகிய நிலையில் பிணம் மீட்பு..!!

Read Time:1 Minute, 48 Second

201709161757528857_Rajasthan-Infant-left-alone-in-house-by-parents-dies_SECVPFராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டம், கோத்வாலி போலீஸ் நிலைய எல்லக்குட்ப்பட்ட ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கன்வாடி காப்பகத்தில் பணியாற்றும் ஒரு பெண் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தார்.

விரைந்துவந்த போலீசார், அந்த வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து திறந்துப் பார்த்தபோது, உள்ளே ஒன்றரை மாத பெண் குழந்தை இறந்து கிடந்தது.

கடந்த வியாழக்கிழமை அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இதில் கோபமடைந்த குழந்தையின் தாய், தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்துக்குள் குழந்தையை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற கணவரும் வீடு திரும்பாததால், அழுது, அழுது களைத்துப்போய் ஓய்ந்த நிலையில் அந்த குழந்தை இறந்திருக்கலாம் என கருதும் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் பிரேதத்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘இந்தியன்-2’ படத்திற்காக மீண்டும் இணையும் ஷங்கர் – கமல்ஹாசன்..!!
Next post விலைமாதுவாக நடிக்கும் ரித்விகா..!!