பிக்பாஸ் வீட்டிற்குள் கமல்… கோல்டன் டிக்கெட் மூலம் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் நபர் இவர் தான்..!! (வீடியோ)
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கார் டாஸ்க் போட்டியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்த வார டாஸ்க் மூலம் அதிக புள்ளிகள் பெற்ற ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கொடுக்கப்பட உள்ளது.இதனை கொடுக்க தானே நேரடியாக பிக்பாஸ் வீட்டிற்கு வருவேன் என்று கடந்த வாரம் கமல் கூறி இருந்தார். அதன்படி இன்று கமல் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளார்.
இந்த கோல்டன் டிக்கெட் சினேகனுக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்ற முதல் நபர் என்றும் கூறப்படுகிறது.
ஒருசிலர் ஆரவ், கணேஷ் இவர்களில் ஒருவருக்கு கிடைக்கும் என்றும் கூறிவருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் நிச்சயம் தெரிந்துவிடும்.
அதே நேரம் கமல் வீட்டிற்கு செல்லும் நேரம் எவிக்ஷனில் உள்ள வையாபுரி வெளியேறியுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று இரவு அதிரடியாக உள்ளே நுழையும் கமல்ஹாசனை வரவேற்று போட்டியாளர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் 39 புள்ளிகள் எடுத்து சினேகன் கோல்டன் டிக்கெட்டினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் பின்பு 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆரவ் கோல்டன் டிக்கெட்டினை தவற விட்டுள்ளது தெரியவந்துள்ளது. இன்றைய இரண்டாவது ப்ரொமோவில் ஹரிஷ் 5 நிமிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறுகையில் கமல் பின்புறம் இருந்த கோல்டன் டிக்கெட் சாட்டே இதனை காட்டிக் கொடுத்துள்ளது.
Average Rating