பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சுஜாவின் கடிதம்…!!(வீடியோ)
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவுடன் சுஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுகடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை கிண்டல் செய்வதற்காகவே தங்களது பொன்னான நேரத்தை செலவிட்ட அனைவருக்கும் நன்றி. உண்மையில், அவை எனக்கு ஊக்கமளித்தன.
அந்த கிண்டல்கள், மீம்கள் எல்லாவற்றையும் நான் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
என்னை, கடும் உழைப்பாளி என நீங்கள் அங்கீகரித்தற்கு நன்றி. அதேவேளையில், என்னை சிலர் சுயநலவாதி என்றும் விமர்சித்தனர். பிக் பாஸ் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி.
அதில், சுயநலத்துடன் இருப்பதில் என்ன தவறு. அங்கே ஹரிஷைத் தவிர எல்லோருமே நடித்துக் கொண்டிருந்தார்கள். எப்போதுமே நான்.. நானாகவே இருந்தேன்எ
ப்போது கமல் சார் என்னை ஊக்குவித்துப் பேசினாரோ அப்போதே நான் வெற்றி பெற்றுவிட்டேன். அதுவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு சிறப்பான தருணம்.
மீண்டும் இறுதி நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கவிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மை வெல்லும் என நம்புகிறேன். கவனத்துடன் வாக்களியுங்கள். எனக்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Average Rating