சிவாஜிகணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ந் தேதி திறப்பு: தமிழக அரசு முடிவு..!!

Read Time:1 Minute, 0 Second

201709260637507186_Sivaji-Ganesan-Manimandam-Opening-on-October-1st-Tamil-Nadu_SECVPFநடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அவரது சிலை, இந்த மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதியன்று சிவாஜிகணேசனின் 90-வது பிறந்த நாள் நிகழ்கிறது. அந்த தினத்தில் சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதை திறந்து வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் முன்னிலையில் 7 வயது மகன் மீது தந்தை தாக்குதல்! யாழில் நடந்த கொடூரம்..!!
Next post உடல் பருமனை குறைக்கும் பூசணி விதைகள்..!!