ஒரே படத்தில் விஜய், மகேஷ்பாபுவை இயக்க தயார்: ஏ.ஆர்.முருகதாஸ்…!!

Read Time:2 Minute, 36 Second

201709261310193477_1_vijay-maheshbabu._L_styvpfவிஜய், மகேஷ் பாபு இருவரையும் ஒரே படத்தில் வைத்து இயக்க தயார் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ஸ்பைடர்’ பட விழாவில் கூறியிருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஸ்பைடர்’. இதில் ராகுல் பிரீத்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். வருகிற 27-ந்தேதி தமிழ், தெலுங்கில் இந்த படம் திரைக்கு வருகிறது.

இதையொட்டி சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்…

“இந்த கதையின் கரு மனிதாபிமானத்தை உணர்த்தும். இதை பிரமாண்டமாக சொல்லி இருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சியில் மகேஷ்பாபு உயிரை பணயம் வைத்து நடித்தார்.

மகேஷ்பாபுவை இயக்க வேண்டும் என்பது என் ஆசை. கதையை சொன்னதும் ‘ஒகே’ என்றார். அவருக்கு தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளும் தெரியும். எனவே, அவரை தமிழிலும் அறிமுகம் செய்ய முடிவு செய்தேன். ராகுல் பிரீத்திசிங்குக்கு இரண்டு மொழிகளும் தெரியாது. என்றாலும் வசனங்கள் நன்றாக கற்றுக்கொண்டு உற்சாகமாக நடித்தார். இந்த படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய படமாக இது அமையும்” என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு “விஜய்-மகேஷ் பாபு ஒப்புகொண்டால் இருவரும் நடிக்கும் படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்” என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

மகேஷ்பாபு, “இது 125 கோடியில் தயாராகும் படம். தெலுங்கு, தமிழில் ரிலீஸ் செய்தால் தான் வசூலை எட்ட முடியும் அதனால் தான் தமிழிலும் நடித்தேன். யாருக்கும் நான் போட்டியல்ல.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன். அரசியல் எனக்கு தெரியாது” என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீளமான முந்தானை கின்னஸில் நீளுமா?..!! (கட்டுரை)
Next post மலைப்போல் குவிந்து கிடக்கும் கொடிய பாம்புகள்… தெறிக்கும் எரிமலை… நரகம் பூமியில்தான் இருக்கிறது?…!!