பாம்பை கொத்த வைத்து வாலிபர் தற்கொலை…!!

Read Time:1 Minute, 56 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90
ரஷ்யாவை சேர்ந்த வாலிபர் தனது மரணத்தை லைவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவின் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் ஆர்ஸ்லான் வாலிவ்(31). இவர் மனைவி காட்யா.

இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். சமீபத்தில் காட்யாவை ஒரு வணிகவளாகத்தில் பார்த்தார் வாலிவ். அவரிடம் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்க அப்பெண் மறுத்துவிட்டார்.

இதனால் வீடு திரும்பிய வாலிவ் சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

மிருகக்காட்சி சாலை கண்காணிப்பாளரான இவர் வீட்டில் பாம்பு உள்ளிட்ட பிராணிகளை வளர்த்து வருகிறார்.

காட்யாவும், இவரும் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி விலங்குகள் தொடர்பாக பதிவிட்டு வந்தனர். வீட்டில் வளர்த்து வந்த கருநாகத்தை தனது கையில் கொத்தவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் உயிர்பிரியும் நேரத்தில் மனைவியின் செல்போன் எண்களை குறிப்பிட்டார். என் மனைவிக்கு யாராவது இவ்விபரத்தை தெரிவியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

என் மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். அவளுக்காக நான் ஒரு மெசேஜ் என் செல்போனில் வைத்திருக்கிறேன் என்று கூறியபடியே அவர் இறந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைவியை லூசு மாதிரி கூட்டிட்டு வந்துட்டீங்களே: சரவணா ஸ்டோர்ஸ் மீது ஓவியா ஆர்மி கோபம்…!!
Next post குடித்துவிட்டு நடு ரோட்டில் தகரால் செய்த புருஷனை, மரண அடி அடித்த பொண்டாட்டி..!! (வீடியோ)