உயிருக்கு போராடிய நண்பன்… செல்பி மோகத்தால் நிகழ்ந்த பரிதாபம்…!! (வீடியோ)
பெங்களூரில் நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருக்க சக மாணவர்கள் செல்பி எடுத்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருக்க சக மாணவர்கள் செல்பி எடுத்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23ம் திகதி மாணவர்கள் குழுவுடன் NCC முகாமிற்காக குண்டாஞ்சநேயா கோவிலுக்கு சென்றனர். 24ம் திகதி கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர், மாணவர்கள் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
உற்சாகத்தில் இருந்த மாணவர்கள் விஸ்வாஷை கண்டுகொள்ளவில்லை, ஆழப்பகுதிக்கு சென்று விஸ்வாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிகிறது. மாணவர்கள் எடுத்த செல்பி புகைப்படத்தை பார்க்கும் போது, விஸ்வாஷ் நீரில் மூழ்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து பொலிசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் விஸ்வாசுவின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கிடையே தனது மகனின் இறப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என விஸ்வாஷின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Average Rating